Monday, March 31, 2014

 
தேன் நிலவு நான் வாட
ஏன் இந்த சோதனை?
வான் நிலவை நீ கேள்
கூறும் என் வேதனை!
எனைத்தான் அன்பே மறந்தாயோ?
மறப்பேன் என்றே நினைத்தாயோ?!
நான் உனை நீங்க மாட்டேன்;
நீங்கினால் தூங்க மாட்டேன்.

என்னையே தந்தேன் உனக்காக!
ஜென்மமே கொண்டேன் அதற்காக!
சுந்தரி கண்ணால் ஒரு சேதி...

Sunday, March 30, 2014

காதல் தோற்றதாய் கதைகள் ஏது?
தோற்றால் தோற்றது காதல் ஆகாது.

பாடல்: உலகில் எந்தக் காதல் உடனே ஜெயித்தது
படம்: நாடோடிகள்

Saturday, March 29, 2014



உனை தினம் எதிர்பார்த்தேன்
உனை தினம் எதிர்பார்த்தேன்

உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்

அழகா உனை தினம் எதிர்பார்த்தேன்

நீ வரும் வழி பார்த்து 
நெற்றிக்கு பொட்டிட்டு
காதணி மூக்குத்தி 
கை வளையல் பூட்டி
கூந்தலில் மலர் சூடி கொதித்து தவித்து
நினைந்து உருகி

உனை தினம் எதிர்பார்த்தேன்

நீர் அலை மேலாடும் நுரைப் பூவைப் போல
நித்தமும் நினைவாலே தடுமாறினேனே
ஆலிலை மேலாடும் ஆகாய வண்ணா
நானென்ன நீ தீண்ட ஆகாதா பெண்ணா
வா சடுதியிலே வாடும் இளமையிலே
வா சடுதியிலே வாடும் இளமையிலே

மிதிலை என்றால் வா ஸ்ரீ ராமனாக
கயிலை என்றால் வா சிவா ரூபமாக
தணிகை என்றல் 
திருத்தணிகை என்றால்
வா கதிர் வேலன் ஆகா

நீ வரும் பாதை பூவிதழ் தூவி
விழி இமைக்காமல் தவம் இருந்தேன்
உன் இரு விழி பார்வை ஒரு முறை காண
கொதித்து தவித்து நினைந்து உருகி

உனை தினம் எதிர்பார்த்தேன்

ராமனின் திருப்பாதம் தொடவேண்டித் தானே
நானொரு கல் போல தெருவோரம் வாழ்ந்தேன்
ஆயுளில் ஒரு பாதி தினம் உன்னைத் தேடி
ஆயிரம் குடம் நீரை அபிஷேகம் செய்தேன்

நீ சிறகு என்றால் நானும் இறகுகளாய்
நீ மனம் திறந்தால் நானும் நினைவுகளாய்
ஏற்று கொண்டேன் நான் சரி பாதி உன்னை
ஏற்றி வைப்பாய் நீ தீபம், நான் எண்ணெய்

எழுதி வைத்தேன் எழுதி வைத்தேன்
நான் உனக்காக என்னை

கண்ணனின் லீலை பாட்டிகள் சொன்ன
கதைகளில் மட்டும் கேட்டிருந்தேன்
மன்னன் உன் லீலை நேரினில் காண
கொதித்து தவித்து நினைந்து உருகி

உனை தினம் எதிர்பார்த்தேன்
உனை தினம் எதிர்பார்த்தேன்

உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்

உனை தினம் எதிர்பார்த்தேன்
எதிர்பார்த்தேன் எதிர்பார்த்தேன்

Tuesday, March 25, 2014



Happened to watch Sujatha movie today. One of my favourite songs- Nee varuvai ena- still appearing greater in male voice. Thank you jayachandran Sir!

Friday, March 21, 2014

மறைத்த முகத்திரை திறப்பாயோ?
திறந்து அகச்சிறை இருப்பாயோ?

உனக்காக உயிர் பூத்து நின்றேன்
உனக்காகக் காத்து காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமி தான்
எப்போது என்னைப் பெண் செய்குவாய்!

இது வரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம்
அன்பே நீ சொல்ல வா................