Wednesday, July 11, 2012

Do Anything-How to Name it



N' I'm already crying.............Its my mother's lullaby, my father's warmth, my brothers' comfort n my friend's hug,

The Maestro's Masterpiece



I want to cry hard...I want to...

Tuesday, July 10, 2012

Uyire Unakkaga






பல்லவி இல்லாமல் பாடுகிறேன்..
பாதை இல்லாமல் ஓடுகிறேன்..
ஊமை காற்றாய் வீசுகிறேன்..
உறங்கும் போது பேசுகிறேன்......
இந்த ராகம், தாளம் எதற்காக..
உயிரே உனக்காக.. உயிரே உனக்காக....

Monday, July 9, 2012

Etho Oru Paatu | Unnidathil Ennai Koduthaen [1998]




ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம்தாலாட்டும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம்தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம்சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம்கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள்குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

Friday, July 6, 2012

DHOORATHIL NAAN KANDA UN MUGAM - NIZHALGAL




தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே!
ஒரு சோகத்தின் ஆரம்பமே!
இது உன்னை எண்ணிப் பாடும் ராகம்.
தூரத்தில் நான் கண்ட உன் முகம்.

வேங்குழல் நாதமும் கீதமும்,
மையலின் ஏக்கமும் தாபமும்,
மாயன் உனது லீலை இதுவே!
ஐயன் உன் தஞ்சம் என் நெஞ்சமே!
தினம் அழைத்தேன்..பிரபு உனையே..!
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா?

காதல் எனும் கீதம் பாடி
உருகும் ஒரு பேதையான மீரா!
வேளை வரும் போது வந்து
காக்கும் கரம் காக்கும் என்று
வீணை மீட்டும் தேவி உள்ளமே
தீராத ஆசையோடு..
வாடாத பூக்களோடு..
காலை மாலை பூஜை செய்தும் கேட்கவில்லையா?

கனவு போல வாழ்வில் எந்தன்
கவலை யாவும் மாற வேண்டும்.!
இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ!
நாளும் எனையாளும் துணை நீயேயென வாழ்ந்தேன்!
மறவேன் மறவேன் மறவேன்
உன் நினைவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்!
வரும் விழி தரும் அதில்
உறவுகள் தெரிவதும் ஒரு சுகம்.
வானமும் மேகமும் போலவே..
நீந்திய காலங்கள் ஆயிரம்!
மேகம் மறைந்த வானில் தனிமை
இன்று நான் கண்டதும் உண்மையே!
தினம் அழைத்தேன் பிரபு உனையே!
ஆடும் காற்ரிலே புது ராகம் தோன்றுமா!
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்…

Thursday, July 5, 2012

என் கண்ணாடி பேசவில்லை



Naan Cherapunji ooraicherndha penna penna!


என் கண்ணாடி பேசவில்லை கண்ணா! கண்ணா!
நான் சிரபுஞ்சி ஊரைச் சேர்ந்த பெண்ணா! பெண்ணா!
நம் வானமோ இரண்டானதே!
வின்மீன்களும் முள்ளானதே!
நான் பாரதி பாடிய காதலியாகின்றேன்!

பிரிவால் உயிரே இளைத்தாயா!
வழி சொல்ல வளையல்கள் விதைத்தாயா!
ஒரு நாள் எனை நீ மறந்தாயா!
மரணத்தைப் பிரிவில் நீ உணர்ந்தாயா!
எங்கும் எங்கும் உன்னைக் கண்டேன்!
என்னைக் கிள்ளி உண்மை கண்டேன்!
இரு விழி பார்க்கும் ஒரு பொய் தானே!
நான் நிழற்படம் கிழித்தேனே!

நிலவா வானை பிரிந்து வரும்!
பிரிந்தால் என் வானம் எரிந்து விழும்!
எனையே மனதும் நினைக்காது!
காற்றையும் என் கைகள் அணைக்காது!
உயிரே! உயிரே! வந்திடுவாயா!
உயிரைக் கூட்டிச் சென்றிடுவாயா!
என் விழி தூங்க உன் இமை வேண்டும்!
வரும் கனவுகள் உயிர் தீண்டும்.

என் கண்ணாடி பேசவில்லை கண்ணா! கண்ணா!
நான் சிரபுஞ்சி ஊரைச் சேர்ந்த பெண்ணா! பெண்ணா!

Monday, July 2, 2012

Enna kuraiyo - Manthira punnagai



என்ன குறையோ?
என்ன நிறையோ?
எதற்கும்
நான் உண்டென்பான்
கண்ணன்.
என்ன தவறோ?
என்ன சரியோ?
எதற்கும்
நான் உண்டென்பான்
கண்ணன்.
என்ன வினையோ?
என்ன விடையோ?
அதற்கும்
நான் உண்டென்பான்
கண்ணன்.

நன்றும் வரலாம்
தீதும் வரலாம்
நண்பன் போலே
கண்ணன் வருவான்.
வலியும் வரலாம்;
வாட்டம் வரலாம்;
வருடும் விரலாய்
கண்ணன் வருவான்!
நேர் கோடு
வட்டம் ஆகலாம்;
நிழல் கூட
விட்டுப் போகலாம்;
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்.
அவன் வருவான்
கண்ணில் மழை துடைப்பான்;
இருள் வழிகளிலே
புது ஒளி விதைப்பான்.
அந்த கண்ணனை,
அழகு மன்னனை,
தினம் பாடி வா மனமே!

உண்டு எனலாம்;
இல்லை எனலாம்;
இரண்டும் கேட்டு
கண்ணன் சிரிப்பான்!
இணைந்து வரலாம்;
பிரிந்தும் தரலாம்;
உறவைப் போலே
கண்ணன் இருப்பான்!
பனி மூட்டம்
மலையை மூடலாம்;
வழி கேட்டுப்
பறவை வாடலாம்;
புதிரான கேள்வி யாவிலும்
விடையாக கண்ணன் மாறுவான்.
ஒளிந்திருப்பான்
எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசை மழையாய்
உலகினை நனைப்பான்.
அந்த கண்ணனை,
கனிவு மன்னனை,
தினம் பாடி வா மனமே!